உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….18-10-2025 சனிக்கிழமைசென்னையில் கொட்டும் மழையில் நள்ளிரவு ஒரு மணியளவில் சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்களில்

ஏக இறைவனின் திருப்பெயரால்…..

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….
18-10-2025 சனிக்கிழமை
சென்னையில் கொட்டும் மழையில் நள்ளிரவு ஒரு மணியளவில் சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்களில் 1)ஜெமினி பாலத்தின் கீழ் மற்றும்
2)மெரினா பீச் கலைஞர் நினைவிடம் அருகாமையில் மற்றும்
3)டி டி கே சாலை, 4)மவுண்ட் ரோடு,
5)எல்.ஐ.சி, 6)சிந்தாதிரிப்பேட்டை, மற்றும் 7)கே கே நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளிகள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் மற்றும் வீடுகளின்றி சாலையோரம் படுத்து இருந்த ஏழை எளிய மக்களுக்கு குளிருக்கு பயனளிக்கும் விதமாக 120 போர்வைகள் வழங்கப்பட்டது….

இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…

சாலையோர வசிக்க கூடிய மக்களுக்கு உணவு .போர்வை.பிரட்.மற்றும் தண்ணீர் பாட்டிலும் மேலும் சிரமத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார உதவியாகவும்….. மாற்று திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாகவும்…. யாருடைய ஆதரவும் இன்றி வசித்து வரும் விதவை தாய்மார்கள் யாருடைய ஆதரவுமின்றி வசித்து வரும் வயதானவர்களுக்கும் வாழ்வாதார உதவியாகவும்…மாற்றுதிறனாளிகள் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி மற்றும் 31 வகையான மளிகை பொருட்களாகவும் வழங்கிக்கொண்டிருக்கிறோம் ….
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால் செக்காகவோ அல்லது டிடி யாகவோ அல்லது கூகுள் பே மூலியமாக தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… நீங்க அனுப்பி வைக்கும் பொருளாதாரத்திற்க்கு அதற்க்கான சான்றுகளை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்….. தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர் :50200069569151
IFSC: HDFC 0000024
G Pey : 8122847961

( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் முனைவர் எம் .முகமது மூஸா…..

எல்லாப்புகழும் இறைவனுக்கே…

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *