சென்னை மாங்காட்டில் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கல்வி உதவி 3000ரூபாய் வழங்கப்பட்டும் மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில்

ஏக இறைவனின் திருப்பெயரால்…..

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….

நவம்பர் (11வது )மாத நிகழ்வுகள்…

சென்னை மாங்காட்டில் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கல்வி உதவி 3000ரூபாய் வழங்கப்பட்டும் மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கணவன் இறந்து மூன்று குழந்தைகளை வைத்து தனிமையில் வசித்து வரும் சகோதரிக்கு வீட்டு வாடகை உதவியாக 3வது மாதம்( 2000)ரூபாய் வாடகை பணம் தரப்பட்டும்
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் வயதான அம்மாவிற்க்கு மருத்துவ உதவியாக 1500ரூபாயும் மேலும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவனை இழந்து நிலையில் பெரிய மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து அந்தம்மாவின் கிட்னியை மகனுக்கு பொருத்தி தொற்று பரவாமல் இருப்பதற்கு இருவரும் எங்கேயும் வெளியே செல்லாமல் மிகவும் சிரமத்தில் இருக்கும் இந்த குடும்பத்திற்கு 8வது மாதமாக மருத்துவ உதவி 1500 ரூபாயும் வழங்கப்பட்டது…
மேலும் தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் வயதான கூலி தொழிலாளிக்கும் சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவருடைய மனைவிக்கும் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவியாக 37வது மாதமாக இரண்டாயிரம் ரூபாயும் மேலும் தஞ்சை மாவட்டத்தில் மகன் மாற்றுதிறனாளியாகவும் பேரன் மூளை வளர்ச்சி குன்றியவனாகவும் இருக்கின்றவர்களை வைத்து சிரம படும் தாய்க்கு உதவியாக 1000 ரூபாய் வாடகையாகவும் மற்றும் 26கிலோ அரிசி மூட்டையும் தரப்பட்டது… தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாதந்தோறும் வழங்கிங்கொண்டிருக்கும் 30 வகையான மளிகை பொருட்களும் 5கிலோ அரிசியும் வாங்குவதற்க்கு 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டும் மேலும் அனைத்து சமுதாய ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை பெட்ரோல் கட்டணமின்றி டிரைவர் கட்டணமின்றி இறைவனின் உதவியால் நடைப்பெறுகிறது… இறைவனின் உதவியால் நவம்பர் மாதம் வழங்கப்பட்ட நிகழ்வுகள்…..
எல்லா புகழும் இறைவனுக்கே…

இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…

சாலையோர வசிக்க கூடிய மக்களுக்கு உணவு .போர்வை.பிரட்.மற்றும் தண்ணீர் பாட்டிலும் மேலும் சிரமத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார உதவியாகவும்….. மாற்று திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாகவும்…. யாருடைய ஆதரவும் இன்றி வசித்து வரும் விதவை தாய்மார்கள் யாருடைய ஆதரவுமின்றி வசித்து வரும் வயதானவர்களுக்கும் வாழ்வாதார உதவியாகவும்…மாற்றுதிறனாளிகள் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி மற்றும் 31 வகையான மளிகை பொருட்களாகவும் வழங்கிக்கொண்டிருக்கிறோம் ….
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால் செக்காகவோ அல்லது டிடி யாகவோ அல்லது கூகுள் பே மூலியமாக தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… நீங்க அனுப்பி வைக்கும் பொருளாதாரத்திற்க்கு அதற்க்கான சான்றுகளை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்….. தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர் :50200069569151
IFSC: HDFC 0000024
G Pey : 8122847961

( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் முனைவர் எம் .முகமது மூஸா…..

எல்லாப் புகழும் இறைவனுக்கே…..

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *