ஏக இறைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
மே&ஜூன் மற்றும் ஜூலை மூன்று மாத நிகழ்வுகள்…
சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளி தாய் மற்றும் தந்தையை இழந்து தனிமையில் வசித்து வரும் அவர்களுக்கு 31வது மாதமாக வாழ்வாதார உதவியாக ( 2000) வாடகை பணம் தரப்பட்டும் மேலும் தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் இருக்க கூடிய கல்லூரியில் படிக்கும் மாணவன் மற்றும் மாணவிக்கும் கல்வி உதவி தொகையாக தலா ஐந்தாயிரம் ரூபாய் (5000) வழங்கப்பட்டும்
மேலும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் கணவன் இறந்து ஒரு வயதுடைய குழந்தையை வைத்து சிரமத்தில் வசிக்கும் பெண்மணிக்கு 2 வது மாதமாக 1500ரூபாய் வாழ்வாதார உதவியாகவும் தரப்பட்டது மேலும் தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவடை என்ற ஊரில் வசிக்க கூடிய உடல்நிலை சரியில்லாத வயதான பெரியவருக்கு வீட்டு வாடகை உதவியாக மூன்றாயிரம் ரூபாய் (3000)தரப்பட்டது மேலும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவனை இழந்து நிலையில் பெரிய மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து அந்தம்மாவின் கிட்னியை மகனுக்கு பொருத்தி தொற்று பரவாமல் இருப்பதற்கு இருவரும் எங்கேயும் வெளியே செல்லாமல் மிகவும் சிரமத்தில் இருக்கும் இந்த குடும்பத்திற்கு 5 வது மாதமாக மருத்துவ உதவி 1500 ரூபாயும் வழங்கப்பட்டது…
மேலும் தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் வயதான கூலி தொழிலாளிக்கும் சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவருடைய மனைவிக்கும் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவியாக 34 வது மாதமாக இரண்டாயிரம் ரூபாயும் மேலும் தஞ்சை மாவட்டத்தில் தந்தை மாற்றுதிறனாளியாகவும் மகன் மூளை வளர்ச்சி குன்றியவனாகவும் இருக்கின்றவர்களை வைத்து சிரம படும் தாய்க்கு உதவியாக 1000 ரூபாய் வாடகையாகவும் மற்றும் மாதந்தோறும் வழங்கிங்கொண்டிருக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 20 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் 30 குடும்பங்களுக்கு மேல் வழங்கப்பட்டும் மேலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை பெட்ரோல் கட்டணமின்றி டிரைவர் கட்டணமின்றி இறைவனின் உதவியால் நடைப்பெறுகிறது…ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மாதம் 15,000 ரூபாய் வழங்கப்பட்டது.. இறைவனின் உதவியால் மூன்று மாதம் வழங்கப்பட்ட நிகழ்வுகள்…..
எல்லா புகழும் இறைவனுக்கே…
இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
சாலையோர வசிக்க கூடிய மக்களுக்கு உணவு .போர்வை.பிரட்.மற்றும் தண்ணீர் பாட்டிலும் மேலும் சிரமத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார உதவியாகவும்….. பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாகவும்…. யாருடைய ஆதரவுமின்றி வசித்து வரும் வயதானவர்களுக்கு மருத்துவ உதவியாகவும்…மாற்றுதிறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களாகவும் வழங்கிக்கொண்டிருக்கிறோம் ….
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால் செக்காகவோ அல்லது டிடி யாகவோ அல்லது கூகுள் பே மூலியமாக தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… நீங்க அனுப்பி வைக்கும் பொருளாதாரத்திற்க்கு அதற்க்கான சான்றுகளை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்….. தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர் :50200069569151
IFSC: HDFC 0000024
G Pey : 8122847961
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் முனைவர் எம் .முகமது மூஸா…..
எல்லாப் புகழும் இறைவனுக்கே…..







Recent Comments